
கையில் பழமிருந்தும்
காய்ந்த முகம் தான்
அறுஞ்சுவை கனியிருந்தும்
கன்னிக்கு இன்றும் பசி தான்
பழங்களை விற்றால் தான்
பசியிலிருந்து விடுதலை
அவள்போல் உள்ள பலர்
பள்ளிக்குச் சென்று கல்வி கற்க
இவள் மட்டும் ரோட்டில்
நின்று பழம் விற்க
சுட்ட பழமா
சுடாத பழமா
எனக் கேட்டு ஒரு ஒளவை வருவாளா?
இவளுக்கு ஒரு நல்வழி தருவாளா ?