
எங்கோ நாம் வைத்த நம்பிக்கைகளை
அதனால் ஓங்கிய சில கைகளை
ஆழ்ந்து சிந்தித்துப் பல வகைகளில்
உடைத்தெறிந்தார் மூடநம்பிக்கைகளை
நம்மேல் நாம் என்ற தன்னம்பிக்கையை
வளர்க்க கை கொடுத்தவர்
அவர் யார் ?
களைப்பறியா உழைப்பு
எவரையும் எதிர்க்கும் துணிவு
பெரும் சமுதாய மாற்றத்திற்கான முனைப்பு
இறுதிவரை தன் கொள்கைகளில் உறுதியான பிடிப்பு
இதையெல்லாம் கொண்டிருந்தவர்
அவர் யார் ?
பின்தங்கியவர்களை
முன் படுத்தியவர்
மிகப்பெரியவர்
அவர்தான் பெரியார்