நீயே ஒளி உனக்கென உருவாக்குத் தனி வழி பிறர் உயர வழிகாட்டு அதன் வழி மாறட்டும் பலரின் விதி
நீயே ஒளி இனி ஏது வீழ்ச்சி ? எல்லாம் பெரும் மீட்சி
நீயே ஒளி இருளெல்லாம் மறையும் இனியெல்லாம் மென்மேலும் சிறக்கும்
நீயே ஒளி மகிழ்ச்சியும் திருப்தியும் நிரம்பும் நிம்மதி உன்னை விரும்பும்
நீயே ஒளி தன்னம்பிக்கை உனக்குள் இவ்வுலகம் உன் கைக்குள்
நீயே ஒளி நீயே விளக்கு அதுதான் கணக்கு இன்னும் தாமதம் எதற்கு ? எழுந்திடு சுடர் விடு இருளை அகற்று இல்லாமையை நீக்கு
உன் ஒளி எங்கும் பரவட்டும் இவ்வுலகில் புது நம்பிக்கை மிளிரட்டும்
தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்
ப. இராசேந்திரன்
You are the light Yes, I said it right.
You are the light At times you fail, that’s alright.
You are the light Whatever your plight, Neverever stop, Success is your birthright.
You are the light As bright as sunlight Never forget, you are a heavy weight Born to be in the limelight With your might You can transform things overnight
You are the light Best wishes on the Festival of Lights.
விரட்டினார்கள் இடம் கிடைத்தது! கல் எறிந்தார்கள் வீடானது!
தீ வைத்தார்கள் வெளிச்சம் வந்தது….. வேல் பாய்ச்சினார்கள் வேலி ஆனது!
விஷம் தந்தார்கள்…. அன்றுமுதல் நான் திருநீலகண்டன் !
புத்தகத்தின் பின்னட்டையில் இக்கவிதையைப் பார்த்தவுடன் இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது. ஆம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா ?
யார்கண்ணன் யார் ? என்று அறிந்தேன்.
அவர் வாழ்க்கையின் சில அனுபவங்கள், அவர் ஆழ்ந்த சிந்தனையின் சில பார்வைகள், அவர் உழைப்பின் வேர்வை, அவர் எண்ணங்களின் நேர்மை, அவர் பரந்த வாசிப்பின் மகிமை இதையெல்லாம் கொண்டதுதான் இப்புத்தகம்.
இதில் இவர் விவரித்துள்ள பல சம்பவங்கள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பாக
திரு டி வி எஸ் அய்யங்கார் எவ்வாறு ஜெனரல் மோட்டோரின் பிரதிநிதிகளை அசத்தி அவர்களின் கூட்டும் ஒத்துழைப்பையும் பெற்றார் என்ற விவரமும்
ஒரு கவியரங்கத்திற்குத் தலைமை ஏற்க வந்த கவிக்கோ அப்துல் ரகுமான் எவ்வாறு தன் வார்த்தைகளால் ஒத்தடம் கொடுத்து யார்கண்ணனின் வலியைப் போக்கி, ஊக்குவித்தார் என்ற செய்தியும் என்னை வெகுவாக பாதித்தது, நீண்ட நேரம் சிந்திக்க வைத்தது.
நதிகள் நீர் நிரம்பி ஓடட்டும் எங்கும் பூக்கள் பூக்கட்டும் மின்சாரம் சூரிய ஒளியில் இருந்து மட்டும் பாயட்டும் வீடாளும்பெண்கள் நாடாளட்டும் பருவநிலை மாற்றம் ஏமாறட்டும்