மாதம் மும்மாரி மழை வேண்டும்

மாதம் மும்மாரி மழை வேண்டும்
அருவிகள் வற்றாது ஓட வேண்டும்
ஆறுகள், குளம், குட்டைகள், ஏரிகள் கண்மாய்கள் நிரம்ப வேண்டும்
மழைநீர் கடலுக்கும் செல்ல வேண்டும்

அனைவருக்கும் நீர் வேண்டும்
சந்தையில் நீர் விற்க்கும் அவல நிலை மறைய வேண்டும்

நிலத்தடி நீர் உயர நிலம் செழிக்க வேண்டும்
நிலம் செழித்து நெல்லுயர வேண்டும்
நெல்லுயர்ந்து பஞ்சம் பிணி நீங்க வேண்டும்

நீரின்றி அமையாது உலகு
இதை நாம் அறிந்தால்
பிரச்சனை ஏது பிறகு ?

நீயே ஒளி


நீயே ஒளி
உனக்கென உருவாக்குத் தனி வழி
பிறர் உயர வழிகாட்டு அதன் வழி
மாறட்டும் பலரின் விதி

நீயே ஒளி
இனி ஏது வீழ்ச்சி ?
எல்லாம் பெரும் மீட்சி

நீயே ஒளி
இருளெல்லாம் மறையும்
இனியெல்லாம் மென்மேலும் சிறக்கும்

நீயே ஒளி
மகிழ்ச்சியும் திருப்தியும் நிரம்பும்
நிம்மதி உன்னை விரும்பும்

நீயே ஒளி
தன்னம்பிக்கை உனக்குள்
இவ்வுலகம் உன் கைக்குள்

நீயே ஒளி
நீயே விளக்கு
அதுதான் கணக்கு
இன்னும்  தாமதம் எதற்கு ?
எழுந்திடு
சுடர் விடு
இருளை அகற்று
இல்லாமையை நீக்கு

உன் ஒளி எங்கும் பரவட்டும்
இவ்வுலகில் புது நம்பிக்கை மிளிரட்டும்

தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்

ப. இராசேந்திரன்

You are the light
Yes, I said it right.

You are the light
At times you fail, that’s alright. 

You are the light
Whatever your plight, 
Neverever stop, Success is your birthright.

You are the light
As bright as sunlight 
Never forget, you are a heavy weight
Born to be in the limelight 
With your might
You can transform things overnight 

You are the light
Best wishes on the Festival of Lights.

P Rajenthiran ( PR)

சொல்ல மறக்காத கதை

விரட்டினார்கள்
இடம் கிடைத்தது!
கல் எறிந்தார்கள்
வீடானது!

தீ வைத்தார்கள்
வெளிச்சம் வந்தது…..
வேல் பாய்ச்சினார்கள்
வேலி ஆனது!

விஷம் தந்தார்கள்….
அன்றுமுதல் நான்
திருநீலகண்டன் !

புத்தகத்தின் பின்னட்டையில் இக்கவிதையைப் பார்த்தவுடன் இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது. ஆம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா ?

யார்கண்ணன் யார் ? என்று அறிந்தேன்.

அவர் வாழ்க்கையின் சில அனுபவங்கள், அவர் ஆழ்ந்த சிந்தனையின் சில பார்வைகள், அவர் உழைப்பின் வேர்வை, அவர் எண்ணங்களின் நேர்மை, அவர் பரந்த வாசிப்பின் மகிமை இதையெல்லாம் கொண்டதுதான் இப்புத்தகம்.

இதில் இவர் விவரித்துள்ள பல சம்பவங்கள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பாக

திரு டி வி எஸ் அய்யங்கார் எவ்வாறு ஜெனரல் மோட்டோரின் பிரதிநிதிகளை அசத்தி அவர்களின் கூட்டும் ஒத்துழைப்பையும் பெற்றார் என்ற விவரமும்

ஒரு கவியரங்கத்திற்குத் தலைமை ஏற்க வந்த கவிக்கோ அப்துல் ரகுமான் எவ்வாறு தன் வார்த்தைகளால் ஒத்தடம் கொடுத்து யார்கண்ணனின் வலியைப் போக்கி, ஊக்குவித்தார் என்ற செய்தியும் என்னை வெகுவாக பாதித்தது, நீண்ட நேரம் சிந்திக்க வைத்தது.

யார்கண்ணனின் அனுபவங்களைப் படித்து, உள்வாங்கி நமதாக்கிக்கொண்டு நிச்சயம் பயனடையலாம். 

வாசிக்க வேண்டிய புத்தகம்.

படித்தேன் சிந்திக்க வைத்தது.

ப இராசேந்திரன்

எருமையில் ஒருவன் வருவான்

வறுமையில் மனம் வாடாதே

செழுமையில் ஆட்டம் போடாதே

அழையா விருந்தாளியாக

எருமையில் ஒருவன் வருவான்

உன் பெருமை சிறுமையெல்லாம்

வெறும் வெறுமை என்றுணர்த்தி

உன்னை அழைத்துச் செல்வான்.

இவர்களின் நிலையும் நிலையாமை கொள்ளுமோ ?

தன் பணி முடிந்து வீடு திரும்பும் கதிரவன்
தன் பொறுப்பேற்க மேலே எழும்பும் சந்திரன்
இவர்கள் தங்கள் அழகை பார்க்க கீழே சமுத்திரன்

அன்றும் இன்றும் என்றும் இவர்கள் நிலையாய் நிற்க
வந்து போகும் மானுடம் இவர்களைத் தவிர அனைத்தையும் விற்க

இவர்களின் நிலையும் நிலையாமை கொள்ளுமோ ?

சாலை

இருபுறமும் நெடு உயர மரங்கள்
பல வண்ணத்தில் அதன் இலைகள்
நடுவே ஒரு சாலை

தென்றல் வந்து தழுவ
சில இலைகள் உதிர்ந்து நழுவ
அது சாலைக்குச் சேலையானது
அதனை அழகை ரசிப்பது என் வேலையானது

சாலை முடிவில் ஒரு திருப்பம்
அவ்வழி தினம் நடப்பது என் விருப்பம்

கவித கவித

நதிகள் நீர் நிரம்பி ஓடட்டும்
எங்கும் பூக்கள் பூக்கட்டும்
மின்சாரம் சூரிய ஒளியில்
இருந்து மட்டும் பாயட்டும்
வீடாளும்பெண்கள் நாடாளட்டும்
பருவநிலை மாற்றம் ஏமாறட்டும்