உன்னை யாரு வெல்ல?

அதிகாலை எழுந்து
ஆதவன் வரும் முன்னே விரைந்து
பல தூரம் கடந்து
பல்லாயிரம் அடி தாண்டி
நீ ஓடிய ஓட்டம்
அனைவருக்கும் பெரும் ஊக்கம்

வேறு என்ன சொல்ல
உன்னை யாரு வெல்ல?

எங்கள் குடியரசு

மனவலிமை கொண்டு
குடியிருப்புகள் நடுவே
தினம் முகம் மூடி ஓடி
உடல் வலுவைச் சேர்த்து
பலரை ஊக்குவித்து
வெற்றி கொட்டும் முரசு
எங்கள் குடியரசு

அடியெடுத்து வை

வாழ்க்கை

அடியெடுத்து வை
பல பல அடிகள் விழும் கலங்காதே

அடியெடுத்து வை
பல தடைகள் வரும் வருந்தாதே

அடியெடுத்து வை
நீ விழக்கூடும்
பிறர் உன்னை மிதிக்கக்கூடும்
உன்மீது உனக்கு இருக்கும் மதிப்பைச் சிறிதும் குறைத்து விடாதே

அடியெடுத்து வை
பல பயணம் தடைப் படும்
நடுநடுவே இடிபடும்
நின்று விடாதே

அடியெடுத்து வைத்து
சில சமயம் நீ பின்னோக்கிப் போகக்கூடும்
பார்வையை நோக்கை மட்டும் எப்போதும் முன்னோக்கி வை

அடியெடுத்து வை
சில சமயம் உன் பிடியில் நீ இல்லாமல் இருக்கக்கூடும்
பயந்து விடாதே

அடியெடுத்து வை
நீ மண்ணோடு மண்ணாக ஆகும் வரை
வாழ்க்கை அது ஒரு முன்னோக்கிய பயணம்
எப்போதும் இருக்கட்டும் இதில் உன் கவனம்

அவள் பிடியில் அவன்

மயில் இனத்தில் ஆண் அழகுமனித இனத்தில் பெண்ணழகுஇரு அழகும் ஒரு இடத்தில்புகை மண்டலம் பின்புறத்தில்கனவுலகம் என்று நினைத்தேன்

அவள் பிடியில் அவன் இருக்கஇது நிஜம் என்று நான் உணர்ந்தேன்

போதிதர்மன்

பல ஊர்கள் கடந்து
வெகுதூரம் நடந்து
அத்தேசத்தில் தன் கால் பதித்தான்
அந்தப் புத்தப்பித்தன்

அவன் வருகையை அறிந்து 
வந்தான் அவனைக் காண 
அத்தேசத்து மன்னன்

அந்த புத்தப்பித்தனைப் 
பார்த்தான் மன்னன்
பித்தன் போல் இருந்தாலும் 
ஏதோ ஒரு ஈர்ப்பு அவனிடம்

என் மனம் என்னிடம் 
அடங்க மறுக்கிறது
யாது செய்வேன் நான்?
என்றான் மன்னன்

இன்று போய் 
வா நாளை அதிகாலை
உன் மனதுடன்

சொல்கிறேன்
 அதை அடக்கும் ரகசியத்தை
 என்றான் அந்த புத்தப்பித்தன்

திரும்பிச் சென்றான் மன்னன்
இரவு தூங்க இயலவில்லை
அதிகாலை வரை காத்திருந்து 
காணச் சென்றான் 
அந்த புத்தப்பித்தனை

உன் மனதுடன் வந்தாயா ?
என்று அந்த புத்தப்பித்தன் 
மன்னனை வரவேற்றான்

என்ன கேள்வி இது 
என் மனம் எப்போதும் 
என்னுடன் தானே இருக்கிறது 
என்றான்  மன்னன்

ஓ அப்படியா?
இங்கே சற்று அமர்ந்து
உன் கண்களை மூடி
உன்னில் உன் மனமிருக்கும் 
இடத்தை எனக்குக் காட்டு 
அதை அடக்கி விடுகிறேன் 
என்றான் அந்த புத்தப்பித்தன்

வெகுநேரம் தேடியும் 
அகப்படவில்லை அவன் மனம்
அந்த மன்னனுக்கு

அடைந்தான் சரண்
அந்த புத்தப்பித்தனிடம்

மன்னனுக்கு மனதைப் 
பற்றிப் போதித்தான்

மனம் என்று ஒன்று இல்லை
அது வெறும் எண்ணங்களின் கலவையே
அது நாம் நடப்பது போல் 
ஒரு செயல் வடிவம் அவ்வளவே.
நாம் நடக்காமல் நின்றுவிட்டால்
நடை அது நின்று போகும்

அதுபோல்
நம் எண்ணங்களை நிறுத்தி விட்டால் 
மனமது மறைந்துபோகும்
பிறகு ஒன்றும் இல்லாததை
நாம் ஒன்றும் செய்ய வேண்டாம்.
அதுவாகவே அது அடங்கிவிடும்

எண்ணங்களை எவ்வாறு 
நிறுத்த முடியும் ?
என்று கேட்டான் மன்னன்

உன் நனவு விழிப்புணர்வுடன் இருந்தால்
நீ எண்ணும் எண்ணங்களை நீ அறிவாய்
நீ அதற்குச் சாட்சியாவாய்
உன் எண்ணங்களை நீ கவனிக்கும்போது
அது வலுவிழந்து மறைந்துவிடும்
மனம் இல்லாத ஒரு நிலை வந்துவிடும்
அதுதான் உன் உண்மை நிலை என்று
உனக்குப் புரிந்துவிடும்
என்று சொல்லி முடித்தான்
புத்தப்பித்தன்.

ஒரு பெரும் உண்மையை உணர்ந்தான்
மனம் தரும் தொல்லைகள்
இனி அறவே இல்லை
என்று மகிழ்ந்தான் மன்னன்

யார் அந்த புத்தப்பித்தன்?
அவன் ஒரு பல்லவ நாட்டு இளவரசன்
புத்தமத கொள்கைகளைச் 
சீன தேசத்துக்கு எடுத்துச் சென்றவன்
அங்கு அனைவரின் கவனத்தையும் தன்னிடம் ஈர்த்தவன்
புத்த மதம் சீன தேச மதம்
ஆவதற்குக் காரணமானவன்
இங்கிருந்து அங்குச் சென்று 
புத்த தர்மத்தைப் போதித்த 
போதிதர்மன்

அவன் ஒரு காந்தி

பல கொடிகள் அவன் கையில்
ஒரே ஒரு சிந்தனை அவன் மனதில்

விற்றாக வேண்டும் அனைத்தும்

பிறகுதான் இன்றைய தினத்திற்கான தற்காலிக சுதந்திரம் அவனுக்கு

அவன் ஒரு காந்தி
ஒரு நேரு
ஒரு சுபாஷ்
தினம் தினம்
சுதந்திரத்துக்குப் போராடுவதால்

இயற்கை

இயற்கை அதில்
ஒரு “கை”
அது கைகொடுக்கும் கையன்ன
இவ்வுலகில் தான் எத்தனை நம்பிக்கை !!!

கேட்டது போதும்
அக்கையை நான் பார்க்க வேண்டும்.

வெள்ளை அறிக்கை

நேற்று மாலை உடற் பயிற்சி முடித்துக்
குளிர் நீரில் குளித்து
உணவைச் சுவைத்து
சற்றே அமர்ந்தேன்
தமிழகத்தின் நிதிநிலை குறித்த
வெள்ளை அறிக்கையைப் படித்தேன்

தமிழகத்தின் ஒவ்வொரு 
குடும்பத்தின் மீதும்
சராசரி ரூபாய் 2,63,976 கடன்
இருப்பதாக அறிந்தேன்

துக்கம் தாக்கத் தூக்கம் வந்ததது
கண்ணயர்ந்தேன்
கனவு வந்தது
தமிழகத்தின் கடன் எல்லாம் கரைந்தது

திடீரென வானில் இடி இடிக்க
என் தூக்கம் கலைந்தது
கடன்பற்றிய துக்கம் 
திரும்பவும் வந்தது
விடியலுக்காகக் காத்திருக்கிறேன்………

மலையே சாட்சி

நடுவே காலமென்னும் கோடு
பலர் வருவதுமாய்
சிலர் போவதுமாய்
பயணிக்க வாழ்க்கை என்னுமொரு ரோடு

காட்சி அனைத்தையும் கண்ட
அந்த உயர்ந்த மலை மட்டுமே சாட்சி
தனியே சென்று அதனிடம் கேட்டேன்

ராமன் ராவணனைக் கொன்றானா?
கிருஷ்ணன் வெண்ணெய்யை
திருடித்தின்றான ?

இதற்கும் அம்மலையே சாட்சி.

அன்பு என்ற வக்சின்

மாஸ்க்கில்லை
சமூக இடைவெளி சிறிதும் இல்லை

தாக்க வந்த கரோனா வைரஸ்
நெருங்கி வந்து நின்றபோது

அன்பு என்ற வக்சின்
பல டோஸ் இருப்பதைக்கண்டு

வம்பு எதற்கென்று வந்த வைரஸ்
திரும்பிச் சென்றது