
வீர சிதம்பரனார்
அவர்
வழக்கறிஞர்
தமிழறிஞர்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத
பெருந்தலைவர்
சுதந்திரப் போராட்டத் தியாகி
செக்கிழுத்த செம்மல்
திலகரின் சிஷ்யர்
சுப்பிரமணிய சிவா மற்றும்
பாரதியின் உயிர்த்தோழர்
கப்பலுடன் வருவேன்
இல்லையெனில்
கடலில் விழுந்து மாய்வேன்
எனக்கூறிச் சென்று
இரு கப்பலுடன் தமிழகம்
வந்த கப்பலோட்டிய தமிழர்
உயர்விலும்
தாழ்விலும்
என் நிலையிலும்
நாட்டின் சுதந்திரமே
தன் மூச்சாகக் கொண்டிருந்த
சுதேசி விரும்பி
சிறைச்சாலையில்
செக்கிழுத்த துயரத்தை
மாற்றியது என் செந்தமிழ் அன்றோ ?
கை தோல் உரிக்கும்
பணிபுரியும்போது
என் கண்ணீரை மாற்றியது
கன்னித் தமிழ் அன்றோ ?
என்று தமிழின் உயர் சக்தியைத்
தமிழர்களுக்குக் கட்டிய தமிழறிஞர்.
அவர் பட்ட பாடு வீண் போகவில்லை
முறை தவறிய அந்நியர்களை
வரை மீறிய வெள்ளையர்களை
வெளியேற்றியாயிற்று
நம் நாடு இப்போது நம்முடையதாயிற்று
இன்று அவர் பிறந்து ஆனது
ஆண்டுகள் நூற்றியைம்பது
அவரைப் பற்றி நாம்
ஒருமுறையாவது சிந்தித்து
நாம் பெற்ற சுதந்திரத்தின்
விலை என்ன என்று யூகித்து
அவர் போற்றிய தமிழின்
இன்றைய நிலை என்ன என்று யோசித்து
அவர் கண்ட கனவையெல்லாம்
நினைவாக்குவோம்
உடைத்திடுவோம்
சாதி, மத, மற்ற எல்லைகளையெல்லாம்
உழைத்திடுவோம்
நம் நாட்டை உயர்த்திடுவோம்.
நம் தமிழை போற்றிடுவோம்