
“சும்மா இருடா” என்று அவன் தாய்
அதட்ட
கோபம் வந்தது அவனுக்கு
சும்மா சொல்லக் கூடாது
அந்த வயதில் அப்படி ஒரு கோபம்
அந்த மரத்தடிக்கு சென்றான்
சும்மா சிறிது நேரம் உட்கார
“என்ன ஆச்சு ?” என்றான்
அவனை அங்கு கண்ட நண்பன்
“சும்மா வந்தேன்” என்றான் இவன்
“சும்மா சொல்லாதே” என்றான் அவன்
“இப்படித்தான் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பான் இவன்” என்றான் மற்றொரு நண்பன்
“எதுவானாலும் சும்மா சொல்லு கவலைப்படாதே நாங்கள் இருக்கிறோம்” என்றான் மற்றொருவன்
“கொஞ்ச நேரம் எல்லோரும் சும்மா இருக்கிறீர்களா?” என்றான் இவன்
“உன் கஷ்டம் எங்கள் கஷ்டம் எப்படி எங்களால் சும்மா இருக்க முடியும் ?” என்றான் மற்றொருவன்
ஒன்றுமில்லை சும்மாதான் இங்கே வந்தேன் என்று கூறி தன் வீட்டுக்கே சென்று சும்மாயிருக்க முடிவு செய்தான் அவன்.