இரவின் அமைதி

இருள் படர்ந்த இரவு
இன்று இல்லை நிலவு

ஊர் தூங்கி காண்கிறது கனவு
அமைதியானபொழுது

தடியடித்து ஒலி எழுப்பி ஊர்காவலரின் வரவு
இரவின் அமைதியைக்
குலைத்தபொழுது

நான் கொடுத்தேன் ஒரு வாக்குறுதி

நீ அத்தடி துறந்தால்
நிச்சயம் உனக்கு நாளைக் காலை
அமைதிக்கான நோபல் விருது

Leave a comment