
இவ்வுலகில்
முதல் பிறந்தது யார் ?
ஆணா ? பெண்ணா ?
அல்லது இருவரின் கலவையா ?
பிறந்தது எப்படி ?
வளர்ந்தது எங்கு?
உண்டதென்ன ?
கடவுளை யார் தந்தது ?
ஏற்றத்தாழ்வுகள் எப்படி வந்தது ?
வெறும் ருசிக்காக ரசிக்க இருந்திருக்கலாம் உணவு
அது ஏன் பசிக்கான ஒன்றாய் ஆனது ?
மனிதர்கள் வந்த கதை அறிய வேண்டும்
மனிதநேயம் எப்போது தொலைந்தது ,
தெரிய வேண்டும் .