
சிலசமயம் பெரிதாகச்
சிலசமயம் சிறிதாகப்
பலசமயம் எனக்கு முன்னே
பலசமயம் எனக்குப் பின்னே
ஒளி வந்தால்
உருவெடுக்கும்
இருள் வந்தால்
அது மறையும்
இருளில் ஏன் ?
உன் அருள் இல்லை என்று
என் நிழலில் நான் நின்று
அதில் என்னையே நான் கண்டு
கேட்டுவிட்டேன் இன்று
பதில் தெரியாமல் அது நிற்க
அதைப் படம் பிடித்தேன்
நீங்கள் பார்க்க