
வந்தபோது நம்மிடம் ஒன்றுமில்லை
ஆகையால் இழப்பதற்கு ஏதுமில்லை
ஜெயிப்பதற்க்கோ எல்லையேயில்லை
இருந்தும் எதுவுமே நிரந்தரமில்லை
இதை ஏற்க மறுப்பதனால் தான் தொல்லை
ஏற்றால் மன அமைதிக்குப் பஞ்சமில்லை
நிஜத்தோடு வாழ மனம் பழகவில்லை
பொய்கள் நிறைய வேண்டும்,
இருந்தும் மனநிறைவில்லை
ஊக்கமிருந்தால் ஆக்கம் குறைவதில்லை
விடாமுயற்சியிருந்தால் தோல்வி நெருங்குவதில்லை
நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை
ஜெயிப்பதற்கோ எல்லையேயில்லை
தோல்வி என்றால் நம் முயற்சி போதவில்லை !