நான் பல் துவக்கும் நேரம் பகலவன் எழுந்தான் அவனை என் கண் கண்டபோது புத்துணர்ச்சி தந்தான் யார் என்ன சொன்னால் என்ன ? காலை எழுவதும் பின் மாலை மறைவதும் தன்னியல்பாகக் கொண்டான் பகலினை செய்தான் இவ்வுலகிற்கே சுடரொளியைத் தந்தான். அவன்போல் பிரகாசிக்க வேண்டும் மறைந்தால் இவ்வுலகமே அதை உணர வேண்டும். பலனேதும் கருதாமல் பிறருக்குப் பல நன்மை செய்ய வேண்டும்.