
நான் பல் துலக்கும் நேரம்
பகலவன் எழுந்தான்
அவனை என் கண் கண்டபோது
புத்துணர்ச்சி தந்தான்
யார் என்ன சொன்னால் என்ன ?
காலை எழுவதும் பின் மாலை மறைவதும்
தன்னியல்பாகக் கொண்டான்
பகலினை செய்தான்
இவ்வுலகிற்கே
சுடரொளியைத் தந்தான்.
அவன்போல்
பிரகாசிக்க வேண்டும்
மறைந்தால் இவ்வுலகமே
அதை உணர வேண்டும்.
பலனேதும் கருதாமல்
பிறருக்குப் பல நன்மை
செய்ய வேண்டும்.