
காஞ்சி பட்டு அவர்
தமிழ் மேல் பற்று கொண்டவர்
பெரியார் தொண்டர் அவர்
திராவிட முன்னேற்றக் கழகம் கண்டவர்
புத்தகப் பிரியர் அவர்
தன் இனிய பேச்சால் பலரை மயக்கியவர்
பல தம்பிகளை கொண்டவர்
மாநில சுய ஆட்சியை விரும்பியவர்
தனித் திராவிட நாடு கேட்டவர்
தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர்
ஹிந்தியை பின்தள்ளியவர்
செந்தமிழை முன்னிறுத்தியவர்
இறந்தும் வாழ்பவர்
என்றும் நம் மனதில் நிற்பவர்
யார் அவர் ?
பேரறிஞர் அண்ணா அவர்
அவர் பெருமை எடுத்துரைப்போம்
அவர் காட்டிய வழி நடப்போம்
(இன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்)