
அவள் கிட்டூர் மகாராணி
ஆங்கிலேயர் ஆட்சிக்கு
அடிபணியாத வீர ராணி
தன் கணவன் இறக்க
மகனையும் இழந்து
நாட்டைக் காக்க
போர்க்களம் பூண்டாள்
கட்டபொம்மன் போல்
கப்பம் கட்ட மறுத்தாள்
ஆங்கிலேயரைத் தலைநிமிர்ந்து
எதிர்கொண்டு துணிவாக எதிர்த்தாள்
தம் படைகளை வீரத்துடன் வழிநடத்தி
தீரத்துடன் போரிட்டாள்
பல முறை தோற்று
பிறகு ஒரு முறை வென்ற ஆங்கிலேயர்கள்
அவளைச் சிறையிலடைக்க
அங்கே வீராங்கனை ராணி
வீர மரணம் அடைந்தாள்.
என்றோ மறைந்தாலும்
இன்றும் சிலையாய் நின்று
மக்கள் மனதில்
மலைபோல் உயர்ந்து
வீர சின்னமாகத் திகழ்கிறாள்
ராணி சென்னம்மா