என்னைச் சுட்டு விட்டான்

ஆதவன் மறைந்தான்
வான்மகள் மேகம் என்ற
வெள்ளடையை உடுத்த
அவளைக் கைம்பெண்
என்று நினைத்தேன்

வானம் பொழிந்தது
அவள் சோகம் தான்
கண்ணீராய் வருவதாய்
பார்த்தேன்

பிறகு அவள்
கருப்பு ஆடை உடுத்தி
வட்ட நிலா வெள்ளை பொட்டு வைத்து
அழகாய் காட்சியளித்தாள்
நானும் அதை ரசித்து விட்டேன்

நான் பார்த்தது ,நினைத்தது , ரசித்தது தெரிந்ததோ அவனுக்கு
மறுநாள் பகல் பொழுது
தன் வெப்ப நிலையை
உயர்த்தி விட்டான்
ஆதவன் தன் வெப்பத்தால்
என்னைச் சுட்டு விட்டான்

Leave a comment