
கிழக்குக் கடற்கரையோரம்
அது மாலை நேரம்
ஆதவன் அங்கிருக்க
அவன் ஒளிக் கடல் அலைகளில்
மிதந்திருக்க
தினம்மேல் இருந்து உலகைப் பார்ப்பதால்
அவனுக்கு அனைத்தும் தெரியும்
என்று நான் நினைத்துக் கேட்டேன் ஒரு கேள்வி
என் வாழ்க்கை அது என் கையிலா ?
அல்லது
பிறர் சத்தியமாக
இருக்கிறது ஒரு சக்தி
என்கிறார்களே அதன் பையிலா ?
கேள்வியைக் கேட்டான்
பிறகு மேகம் தன்னை மூடியபடி
சற்று யோசித்தான்
பிறகு பதிலேதும் கூறாமல்
முற்றுமாக மறைந்தான்
இரவு யோசித்து பின்பு காலை
விடையுடன் வரட்டும் என்று
நானும் நகர்ந்தேன்