
இவையெல்லாம் அது
ஒருசேர காண்பதரிது
சில நோய் தீர்க்கும்
சில ருசி சேர்க்கும்
நோய் தீர்க்க
ருசி சுவைக்க
தெரிய வேண்டும் உனக்கு
எதனை எத்துடன் எந்நேரம்
எப்படி, அது சேர்த்தால்
எது நோய் தீர்க்கும்
எது சுவை கூட்டும் என்று
உன் பாட்டியிடம் கேள்
ஒரு பாட்டுப் பாடி
சொல்லிவிடுவாள்
அந்த ரகசியத்தை.