
நான் யார் என்று தெரிந்துகொள்ள
என்னால்தான் என்ற எண்ணத்தைக் குறைத்துக்கொள்ள
பிறரால் தான் நான் என்பதைப் புரிந்துகொள்ள
நான் நான் என்பதைக் கடந்து செல்ல
சிலசமயம் அது வேண்டும் எனக்குத் தனிமை
பொறுமையாக அதில் நான் இருந்தால்
அந்த” நான்” கரைந்து “நாம்”
மலர்ந்திடுதே அது இனிமை