
நான் யார்?
எனக்குத் தெரியவில்லை
எங்கிருந்து வந்தேன் ?
அதுவும் புரியவில்லை
எங்குச் செல்வேன் ?
அதிலும் தெளிவு இல்லை
என் பயணம் எவ்வளவு தூரம் ?
யாரும் சொல்லவில்லை
என் எண்ணங்கள் எப்படி என்னுள் ?
எண்ணிப் பார்த்தும் பலனில்லை
விதியா அல்லது மதியா ?
விடை தெரியவில்லை
அதுதான் கதியா?
கடவுளா அல்லது கட உன் உள்ளா ?
படகில் அமர்ந்து
மெல்ல நகர்ந்து
ஆற்றின் நடுவே
சென்று கேட்டேன்
என் கேள்விகளை
படகு நின்றது
அசையாமல் இருந்தது
பெரும் அமைதி நிலவியது
என் கேள்விகள் அனைத்தும்
ஆற்று நீரில்
மூழ்கிக் கரைந்தது.